கல்கிசையில் 15 வயது சிறுமியை இணையத்தளம் ஊடாக வாங்கிப் பாலியல் நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி கடற்படை மருத்துவர், பிரதேச சபையின் துணை தவிசாளர் மற்றும் 2 இரத்தின வியாபாரிகள் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நால்வருக்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.