தனிமைப்படுத்தல் சட்டத்தை தண்டனையாகவோ, தடுத்து வைக்கும் வழியாகவோ பயன்படுத்தக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை கூறியுள்ளது.
அமைதியான ஆர்ப்பாட்டங்களில் கலந்துக்கொள்ளும் நபர்களை கைது செய்யக் கூடாது.
நோய் தொற்றியுள்ளவர்கள் அல்லது நோய் தொற்றியுள்ளவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கே தனிமைப்படுத்தல் சட்டம் பொருந்தும்.
இவர்களை தவிர வேறு எவருக்கும் தனிமைப்படுத்தல் சட்டம் பொருந்தாது. தனிமைப்படுத்தல் என்பது தெளிவாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை.
அதனை தண்டனையாகவோ, தடுத்து வைக்கும் வழிமுறையாகவோ பயன்படுத்தக் கூடாது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.