அரசாங்கத்திற்கு எதிராக அனுராதபுரம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அனுர பண்டார இன்று காலை மகாவிலாச்சிய பேருந்து நிலைய கூரையில் ஏறி போராட்டம் நடத்தினார்.
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசும் தலைவர்களின் மீதான அடக்குமுறை மற்றும் மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஊடக நிறுவனங்களின் மீதான அடக்குமுறைக்கு எதிராக அவர் இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளார்.
இதன்போது அவர் கருப்பு துண்டொன்றை அணிந்தபடி மகாவிலாச்சிய பேருந்து நிலையத்தின் கூரை மீது ஏறி, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதேவேளை அனுராதபுரம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அனுர பண்டார, முன்னர் இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.