உடனடியாக மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகும்படி நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று முன்தினம் மாலை முன்னாள் மாகாண சபைப் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி அடுத்தவருடத்தின் முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரச உயர்மட்டம் ஆலோசனை நடத்திவருவதாக மேலும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.