நாட்டில் நேற்று கொவிட் தொற்றால் 31 பேர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 17 ஆண்களும், 14 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனாவால் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,733 ஆக அதிகரித்துள்ளது.