இரு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதுளை தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் இரு வைத்தியர்கள் மற்றும் 05 தாதியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பதுளை கிளைத் தலைவரும், ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளருமான வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
இரண்டு கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் குறித்த நபர்கள் பதுளை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரியவந்துள்ளது.