முகநூல் ஊடாக ஆணொருவரை ஏமாற்றி 9 லட்சம் பணம் பறித்துவந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்புள்ள பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வேறு யுவதிகளின் அழகிய புகைப்படத்தை பயன்படுத்தி, முகநூல் கணக்கு ஆரம்பித்து, தனது தொழில் ஆசிரியர் எனவும், வயது 30 எனவுமே முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருடன் தொடர்பைபேணிய 32 வயது இளைஞரொருவர் சுமார் 9 லட்சம்வரை வங்கிக் கணக்கில் பல தடவைகள் வைப்பிலிட்டுள்ளார்.
அதன்பின்னர் தொடர்பு இல்லாமல்போனதையடுத்து குறித்த இளைஞர் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.