முகநூல் ஊடாக அழைப்பு விடுத்து ஹபரணை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் விருந்து நடத்திய பெண் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருந்து நடந்த இடத்தை நேற்று பொலிஸார் முற்றுகையிட்டு அவர்களை கைது செய்துள்ளனர்.
ஹபரணை குளக்கரையில் அமைந்துள்ள விடுதியில் இந்த முகநூல் விருந்து நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.
29 வயதான பெண்ணொருவரும், 22 முதல் 28 வயதான 16 இளைஞர்களும் இணைந்து இந்த விருந்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் இன்று கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.