ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.
இதனைத் கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.
அத்துடன், நாட்டின் அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதி ஒருவர் இருமுறை போட்டியிடலாம் என்கிறதன் அடிப்படையில் 2024ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவே இருப்பார் என்றும் அவர் கூறினார்.