கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்த யாழ்.ஊர்காவற்றுறையை சேர்ந்ந்த மீனவர் தமிழகம் கோடியாக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்றுறையை சேர்ந்த சில்வஸ்டார் மரியதாஸ் என்ற மீனவர் நெடுந்தீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில் இன்று தமிழகம் கோடியாக்கரையில் குறித்த மீனவரின் சடலம் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.